Monday 24 August 2015

முடிவிலியாய் தொடர்ந்தபடி...

முடிச்சவிழ்க்க முயற்சிக்கும்
மனமும் ஓர் நாள் ஓய்ந்து போகும்!
மனங்களைப் படிக்கும் கலையில்
தேர்ச்சி பெறாத மாணவர்களே அதிகமாய்...

இன்று சிநேகமாய் சிரித்தவர்கள்
நாளை சிரிக்காமல் கடந்து செல்வார்கள்
எதனால் என்பதை அறியாமலே
உள்ளே தும்புச் சிக்கல்களால்
ஒரு குழப்பக் கூடு உருவாகும்...

அறிந்தோ அறியாமலோ
எவரையாவது சிலுவையில் ஏற்றி விட்டு
பாவிகளாகிறோம்...
விடையறியா மனக் கிணற்றின்
ஆழங்கள் இன்னும் ஆழங்களாகவே...

வலி மிகுதியுடன் யாரோ ஒருவர்
யாரோ ஒருவரால் என்பதன் தொடர்ச்சி
முடிவிலியாய் தொடர்ந்தபடி...
 
 ---கீர்த்தனா---

No comments:

Post a Comment