Tuesday 29 October 2013

சுட்டு விரல்களுக்குள் அடங்கின..

ஆனந்த விளையாட்டுக்கள் - இன்று
அடங்கின சுட்டு விரல்களுக்குள்...
துள்ளித் திரிந்த சிட்டுக்கள் - இன்று
அள்ளித் தெளித்தனர் சினத்தை!!!
முல்லைச் சிரிப்பை மறந்து
இருக்கை விட்டு எழ மறுத்து...
கொள்ளை கொள்ளையாய்
சிற்றுண்டி கொறித்தபடி....
கொட்டக் கொட்ட திரையை
உற்றுப் பார்த்தபடி...
விரல்கள் மட்டும் ஓயாமல்
விவரமாய் நர்த்தனமாடியபடி...

--- கீர்த்தனா---

No comments:

Post a Comment