Saturday 21 December 2013

எண்ணிய முடிதல் வேண்டும்...

வெறும் கோஷங்களுக்காகவோ...
அன்றேல் தன் புகழுக்காகவோ...
புனையவில்லை அவன் கவிதை!!

அவன் சொல்லெனும் வண்ணமும்
செயலெனும் திண்ணமும்
ஒன்றாக்கி வாழ்ந்திட்ட அமரகவி!!!

சுவாசமாய் கொள்கைகள்
சுத்தமாய் சுவீகரித்து...
உணர்ந்த உணர்வுகளை
வார்த்தைச் சிலம்புகளாய்
உருக்கி வார்த்து...
புரட்சியின் வேட்கையை
அக்கினித் துண்டங்களாக்கி...
அனலாய் விதைத்தவன் பாரதி
அடக்கப்பட்டோர் அகத்தில் பார் அத்தீ...

அவன் ஆன்மாவின் இராகங்கள்
மெய் ஆக்கல் வேண்டும்- அவை
மெய் ஆக்கிய பின்பே
அவன் புகழ் பேசவும், பாடவும்
அவனியில் எமக்கருகதை தோன்றும்!!
வாரீர்!! வாரீர்!! அவன் பணி தொடர்வோம்!!!

--- கீர்த்தனா---

4 comments: