Wednesday 25 December 2013

வையகத்தின் பேரொளியே!!!

வைக்கோலின் அணைப்பில்
வையகத்தின் பேரொளியே!!!

மெய் கொண்ட வேதனைகளும்
பொய் ஆனோரின் பாவங்களும்
வாஞ்சையுடன் சுமக்கப் பிறந்தவரே!!

மறு கன்னத்துடன் அறைந்த கன்னத்தையும்
மறுபடி காட்டும் பொறுமையும், அன்பும்
உம்மிடம் வேண்டுகின்றோம்...

மன்னிப்பெனும் வார்த்தையின்
மாண்புக்கு சாட்சியானவரே
மறந்து விட்டோர் நெஞ்சங்களில்
மன்னிப்பை கற்றுத் தருவீர்...

இறை தூதா! இயேசு பாலா!
அன்பெனும் பெருமழை
அனைவர் உள்ளங்களையும் குளிர்விக்க
ஆனந்தமாய் பிறந்தீரே....

இனி நிலைத்திடுமே மனிதம்
ஒளிர்ந்திடுமே இவ்வையகம்...

---கீர்த்தனா---

2 comments:

  1. happy christmas.
    subbu thatha.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. same to u Sir :)

      kandippaa blog padikkiren....

      Delete