Friday 20 December 2013

மூங்கில் குழற் காற்றாய்...

 பெரு மரத்தையும்
அடியோடு பெயர்க்கும்
அதே காற்றுத்தான்
மூங்கில் துளைகளின் வழியே
நுழைந்து குழைந்து
இன்னிசை நாதத்தை
மழலைக் குழந்தைகளாக
பிரசவித்துச் செல்கிறது!!!

ஊதும் அழகிய உதட்டுத்தாயின்
கர்ப்பத்தின் வழியே பிறந்து
நடனமாடும் விரல்களின்
ஆனந்தத் தழுவலில்
மூங்கில் துளைகளில்
புகுந்து தவழ்ந்து வரும்
இசைத் தென்றல் ஆகிடவே
இனிய இப் பிறப்பெடுத்தேன்!!!

---கீர்த்தனா---

1 comment:

  1. thank u thank u sakothara.. ungal ookkuvippukku manamaarntha nandri endrum.. :)

    ReplyDelete