Monday 17 February 2014

குட்டிப்பெருமாட்டி!!

சாலைவிதி அறியும் வயது இல்லை!
சாத்வீகம் அறிந்த முல்லை!
சிவந்த பொற்பாதம் தரை அளக்க...
சிந்தனை தேக்கிய விழி வழி அளக்க...

சின்னஞ்சிறு மின்மினிப் பூச்சி
சிறுகைகள் தூக்கிக் கம்பெடுத்து,
தடுமாறும் திசையறியாக் கப்பலுக்கு
கலங்கரை விளக்கின் ஒளியானது!!

விலகிச் செல்லாது விளக்கேற்றுங்கள்!
விதி எழுதிய கோலம் மாற்றுங்கள் - போகும்
வீதி வெகுதூரம்... பயணமோ பெரும் துயரம்!!!
விளக்கேற்றிய குட்டிப்பெருமாட்டி இவள்!
ஒளிவீச்சு அவள் வாழ்வுக்கும் தேவை...

---கீர்த்தனா---

2 comments:

  1. படத்திற்கேற்ப வரிகள்... கலங்க வைத்த வரிகள்...

    ReplyDelete