Friday 14 February 2014

காதலில்லா உலகம் இல்லை!

கண்டுகொண்ட கொடையும்
காணா விடையுமாய்
பலவகைத் தழுவல்
காதல் மனங்களில்...

வென்றவர் வானில் மிதக்க...
தோற்றவர் மண்ணில் துடிக்க...
கவிதையாயும் கானலாயும்
காதலின் பயணமோ தொடர்கிறது!

விளைந்த காதலின் மழைச்சாரலிலும்
தொலைந்த காதலின் விழிச்சாரலிலும்
காதற்செடி மட்டும் நொடிப் பொழுதில்
பெருவிருட்சமாய் ஓங்கி உயர்கிறது!

காதலில்லா உலகம்
கனவினில் கூட இல்லை!
கனவாகிப் போனாலும், நனவாகிப் போனாலும்
நிஜமான காதலும் காதலர்களும் வாழ்க!
காதல் கொண்ட உயிரினங்கள் அத்தனையும் வாழ்க!

--- கீர்த்தனா---

2 comments:

  1. அன்பு தினம் - என்றும் வேண்டும்...
    தினம் என்றும் - அன்பாக வேண்டும்...

    அன்பு தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. nandri nandri thankalukkum vaazhththukkal sakotharaa... :)

      Delete