Friday 25 July 2014

உயிர்ப்பலி ...


எங்கும் செங்குருதி வீச்சம்!
தனக்கு தனக்கு நடக்கையில்
கொதிக்கும் நெஞ்சங்கள்,
அயல் வீட்டில் அயல் நாட்டில்
நடக்கும் சம்பவங்களை
உச்சுக் கொட்டியபடி கடந்து செல்கின்றன!

மனிதத்தை கொன்று குவித்தபடி
மரிக்கும் போது,
கொண்டு செல்ல முடியாதவற்றுக்கான
போராட்டம்!
சிலருக்கு தான் ஆறடி மண் கூட சொந்தம்!
தணலில் வெந்து போவோருக்கு அதுவுமில்லை!

வாழும் காலத்துள் எளியோரை
ஏன் வருத்துகிறார்கள்!
எதற்காய் இன்னொருவர் உரிமைகளை
உயிர்ப்பலி வாங்கிப் பிடுங்குகிறார்கள்!

அப்பாவியாய் உயிர் துறக்கும்
எல்லா ஜீவன்களுக்குமாய்
எதுவுமே செய்ய முடியாமல்
உள்ளே கலங்குவோராய் மட்டுமாய்...
இல்லையெனில் குமுறல்களை
எழுதிக் கொட்டுவோராய் மட்டுமாய்...
வாழ்க்கை தொடர்கிறது!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment