Wednesday 16 April 2014

சுயாதீனக் கோடுகள்

சுயாதீனக் கோடுகளின்
கையாட்சியில்
சிந்தனைப் படங்களை
வரைகின்றேன் இலகுவாக!

கனவுகளின் பதிப்புகளாய்
கவிகளும் ஓவியங்களும்
உணர்வுகளை கச்சிதமாய்
உள்வாங்குகின்றன!

உணர்வுகளின்
மொழிபெயர்ப்பை மட்டும்
உள்ளங்களில்
சரியாகப் பதிக்க முடியாமலே
பல நேரங்களில்...

---கீர்த்தனா--- (கீதா ரவி)

2 comments:

  1. மிகவும் நன்றி தோழர். உடல்நலக்குறைவால் வலைத்தளத்துக்கு வர முடியவில்லை. தாமதமான பதில் பின்னூட்டத்துக்கு வருந்துகிறேன்.



    ReplyDelete