Tuesday 6 January 2015

மின்னுகின்ற வைரநிலா!

அன்பென்னும் தேன் பொழிய
அண்டமெல்லாம் அதில் குளிர
பொன்னிறத்து வைக்கோல் மேல்
மின்னுகின்ற வைரநிலா
பாலகனே நீர் உதித்தீர்
பாவமெல்லாம் கரைத்து விடும்!

செபம் சொல்லி செபம் சொல்லி
ஆண்டவனைத் துதித்த பின்னும்
பாவ மூட்டை சேர்க்கின்றோம்...
பாவியர்கள் உலகமெலாம் ...

மனிதம் எங்கே சென்றதுவோ...
மனங்கள் எல்லாம் வருத்துகின்றோர்
குணங்கள் மாற்ற வாரீரோ
குறைகள் எல்லாம் தீர்ப்பீரோ...

நொந்து போன ஆட்டுக்குட்டிகளின்
சிலுவை பாரம் ஏற்பீரோ...
வெந்து போன மனங்கள் தனை
மன்னவரே காப்பீரோ...

விண்ணகத்து வண்ண நிலா
மண்ணகத்தில் மலர்ந்தீரே!
எண்ணமெலாம் அறிந்து நீரும்
வண்ணமய அகிலமொன்றை
சாந்த விழிப் பார்வையினால்
அன்புமயம் ஆக்கிடுவீர்...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment