Tuesday 23 September 2014

புன்னகையை பொன்னகையாக்கி...

சிரிப்புக்குப் பின்னே ஒளிந்திருக்கும்
சிந்திய விழித் துளிகள்
சொந்தமாய் சிலரிடம்...

புன்னகை இதழ்களுக்குள்
புதைத்து வைக்கப்படும்
புண்பட்ட உணர்வுகள் ஆயிரம்...

புன்னகையை பொன்னகையாக்கி
இன்னொரு நெஞ்சம் மலர வைக்க
இன்னுயிரை மண்ணுலகில் உயிர்ப்பித்தவன்
என்னுயிரையும் பிரிய உயிர்களையும்
உள்ளிருந்து இயக்கட்டும்...

---கீர்த்தனா---

3 comments: