Friday 8 June 2012

கேளாமலே....

தவறேதுமில்லை
என்னிடத்திலே…
கேளாமலே
என்னிதயத்துள்
உட்புகுந்தாய் …

உயிரிலும்
உணர்விலும்
கலந்தாய் …
நானாகவுன்னை
வெளியேற்றமாட்டேன்…

எனைவிட்டுப்போகும்
எண்ணமெனின்
நீயாகவே வெளியேறு
எனை வலிக்கச்
செய்யாமலே….

ஆம்.. தெரியும்
வலிக்க வைக்க
உன்னால்...
முடியாதென்று...
அதனால் தான்
இத்துணிவு...

-----------கீர்த்தனா-------------

No comments:

Post a Comment