Thursday 19 March 2015

பேறு பெற்றோர்...

சாத்தான்கள் நடனமாடும்
தூக்கம் மறுக்கும் இரவுகளில்...

கற்பனைப் பூதங்கள்
விண் தொட வளரும்...

இனம்புரியாப் பயப்பந்துகள்
நெஞ்சுக்குள் உருளும்...

அமைதியின்மை
ஆட்டிப் படைக்கும்...

விழியோரச் சிறுதுளிகள்
தலையணை அணைக்கும்...

தூக்கம் வரப் பெற்றோர்
பேறு பெற்றோர்...

---கீர்த்தனா---