Wednesday 2 September 2015

மழை இதம்!















தாழ்வாரம் சலசலத்து ஓடுகிறது
ஆழ் அமைதி மனதில்...
மழைக்கும் எனக்குமான உறவு
விளக்கிச் சொல்ல முடியா உணர்வு...
நாளை முளைக்கும் குழப்பங்களை
நாளை பிடுங்கி எறியலாம்...
இன்று மழை இதம்!
இந்த நிமிடம் நிஜம்!

10 comments:

  1. அருமை ரசித்தேன் சகோ.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி சகோதரா...

      Delete
  2. மழை இதத்தை ரசித்தேன். எனது வலைப்பூவுக்கும் வருகை தந்தமைக்கு நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி. கண்டிப்பாகத் தொடர்வேன் தோழி!

      Delete
  3. மறந்து போன வார்த்தை தாழ்வாரம் அழகான சலசலப்பு இதமான மழை.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ச்சி.. மிக்க நன்றி தம்பி!

      Delete
  4. ஆஹா... மழைக் கவிதை அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா...

      Delete
  5. வணக்கம் சகோ !


    நன்மை புரியும் நாளாக
    ..........நாளை இருக்கும் என்றாலும்
    இன்றை என்னும் வார்த்தைக்குள்
    ..........இருக்கும் உன்றன் நம்பிக்கை
    சின்னத் தூறல் உயிர்புகுந்து
    ..........சிந்தைக் கிளர்ச்சி தந்ததுவோ?
    கன்னல் தமிழில் கவிபாடிக்
    ..........காட்டிச் சென்றாய் நற்பாடம் !

    அருமை சகோ தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்


    ReplyDelete
    Replies
    1. அழகிய கவி வரிகளில் பின்னூட்டம் அருமை சகோதரா. உங்கள் வருகையில் அகம் மகிழ்ந்தேன். மிகவும் நன்றி சகோதரா..

      Delete