Sunday 3 November 2013

நரகாசுர வதம் போதவில்லை


ஏற்றத் தாழ்வில்லா
வாழ்விற்காய்
ஏழ்மையை வதம்
செய்ய வேண்டும்!

பண்டிகை கொண்டாட
நரகாசுர வதம் மட்டும்
போதவில்லை
காத்தற் கடவுளே!

ஏழ்மையின் பெருமூச்சில்
அணைந்து போகும்
தீபங்கள் ஒளி பெறும் நாளே
தீபாவளிப் பண்டிகை நாள்!

---கீர்த்தனா---

2 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete