Saturday 20 October 2012

என்னுயிர் பாரதி...!


நெஞ்சினுள் வாழும்
என்னுயிர் பாரதி...!
சமூகச் சாக்கடைகளை
மிதித்தபடி நடக்கின்றேன்
மாற்றும் திராணியற்று...!

மந்தைகளாய் வாழும்
மாந்தர் மத்தியில்...
ஒளிந்திருக்கும் மனிதம்
எங்கே தேடுவேன்...
நல்லவர் கெட்டவர்
பிரித்தறியத்
தெரியவில்லை...!
சுயநல ஜகத்தின் முன்
தலை குனிந்து...
தோற்றுப்போய்...!

ஏறு போல் நடை
தேறவில்லை இங்கு...!
உன் பக்தையாய் வாழும்
தகுதி இழந்து...
கூனிக்குறுகி உணர்வு இறந்து
மனக்கூட்டுக்குள் பதுங்கி
வெறும் பிணமாய்...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment