Thursday 11 October 2012

முட்களும் பூக்களாகும்…

கூடப் பிறக்கவில்லை…
கூடித் திரியவில்லை…
எத்தனை அன்பு…
உள்ளம் எல்லாம்
நிறைத்து…!

எங்கிருந்து வந்தார்கள்
அன்பு தந்து திணறடிக்க…!
ஒற்றைச் சொல்
பரிவு வார்த்தை…
ஒற்றிச் செல்லும்
இறகால் மனதை….

மனதில் தோன்றும்
உணர்வுகளுக்கு…
வார்த்தைகள் ஒன்றும்
படைக்கவுமில்லை…!
வார்த்தை தேடி
வாய் வராமல்…
நெகிழ்வு நெகிழ்வு
நெஞ்சார்ந்த நெகிழ்வு…!

அதற்கும் ஒரு பெயர்
உணர்வுப் பலவீனம்…!
இத்தனை மலர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்து…
அன்பை அள்ளி
வாசம் தெளித்தால்…
பலவீனமும் பலமாகும்…
முட்களும் பூக்களாகும்….!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment