Friday 28 December 2012

நிலைக்காத உறவு...

நீளும் இரவுகள்...
நிறைவேறாக் கனவுகள்...
நினைக்காத நெஞ்சத்துக்காய்...
நினைந்துருகும் நீள்நிலைகள்...
நீக்கமற நீ என்னுள்ளே,
அன்று சொன்னது நீ தானா?
நீக்கிவிடத் துடிப்பதுவும்,
இன்று உண்மையில் நீ தானா?
நிலைக்காத உறவும்...
நிலைமாறும் உலகும்...
நிராசைகளின் பிறப்பிடமாய்...
நிதர்சனத்தின் உறைவிடமாய்...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment