Sunday 30 September 2012

இசையால் வசமாகா இதயம் எது...


இமைகளை மூடி…
மெல்லிசைப்பாடல்…
காதினில்...இதமாய்
தவழ விட்டேன்…!
இராகமும் அறியேன்…!
தாளமும் அறியேன்…!
இசையினை மட்டும்
உயிரினுள் உணர்ந்தேன்…!

மனம் தொடும் வரிகளை
வியந்து இரசித்தேன்…!
குழைந்து பாடும் குரல்களை
அணு அணுவாய் இரசித்தேன்…!
உருக்கி இழையும் இசையோ
உயிர்நிலை தொட்டது…!

நரம்பினைச் சுண்டி
நாதம் பரவிட…
மயிர்கால்கள் குத்திட…
இரத்தப் பாய்ச்சல்
உச்சந் தலைக்கேற…
கண்கள் ஆனந்த மழையை
பொங்கிச் சொரிந்தன…!
இசைத்தேவதை என்னுள்ளே…
நடனம் ஆடவே…எங்கெங்கோ
பறந்து சென்றேன்…!
சொர்க்கத்தின் வாசலைத்
தொட்டு வந்தேன்…!

"ஊனை உருக்கி உயிரில்
விளக்கை ஏற்றினாரம்மா"
இசைக்கு ராஜா
இளைய ராஜா...
உணர்வுடன் சொன்ன வரிகள்
உள்ளத்தில் எழுந்து
உருக்கிச் சென்றது...!
இசைக்கு இணையாய்…
இதயம் தழுவ உருகிக்கரைய…
உயிர்க்காதலால் கூட
முடியாதென்பேன்...!

----கீர்த்தனா----

No comments:

Post a Comment